Wednesday, January 10, 2018

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..!

வாழ்வில் ஒருமுறையாவது
சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..!
உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.
ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
இங்கு மூன்று மூர்த்தங்கள்
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை , தீர்த்தமும் இங்கே பச்சை,
விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.
கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….
மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்
இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்
மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி
இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.
இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட
ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.
அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…
இங்கே தான்...
இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது
இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…
இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.
இதுதான் கோவில் உருவான வரலாறு.
கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…
அதுதான் தாழம் பூ.
நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,
பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.
நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.
ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.
பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
இத்தலத்திற்கு எப்படி செல்வது....
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
ஓம் நமச்சிவாய..

எளிய கடன் நிவர்த்தி முறை

   கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமேதவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டுகொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்குகொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழேகொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன்பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம்வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில்வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கிவரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும்ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கிகொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கிஅதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார்சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள்செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்துஅரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில்உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதைஅனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கிசெய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மிசன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்


Tuesday, February 21, 2017

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்

(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்

(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:
வீட்

டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று

(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

Monday, February 20, 2017

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்.

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும்.

இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது.

சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.

கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

 பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது..

விபூதி

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

எந்த லட்சியத்தையும் அடைய லவண (உப்பு) வழிபாடு!

"உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!' என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர்.

விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள். இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரிய வெற்றி முறை இன்று மறந்தேபோய்விட்டது.

உப்பின் பௌதிகவியல் சக்தி

சைவ அனுட்டான வகைகளில் ஸ்பரிச தீட்சை என்ற ஒரு வகையை அறிவீர்கள். ஸ்பரிசம் என்றால் தொடுதல் என்று பொருள். அதாவது ஆசிரியர் மாணவனின் தலையைத் தொட்டு மந்திரங்கள், சாஸ்திர முறைகளைக் கூறும்போது, அவருடைய உடலிலுள்ள உப்புத்தன்மையும் மாணவனுடைய உப்புத்தன்மையும் 40 + 60, 55 + 45, 35 + 65 என்ற சதவிகித அடிப்படையில், மாணவனிடம் பௌதிகவியல் சக்தியாகக் கலந்துவிடுகிறது. இது மாணவனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பல் மருத்துவர்கள் தினமும் உப்புக் கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால், வேறு மருந்துகளே தேவைப்படாது என்று சொல்வார்கள்.

நம் உடலில் புண் ஏற்பட்டால், குப்பைமேனி இலையோடு உப்பு சேர்த்து பற்றிட்டால் குணமாகிவிடும். மிளகை உப்புடன் சேர்த்துவைத்தால், வீட்டில் துர்சக்திகள் நெருங்காது. கடல்நீரில் மூழ்கியெழுந்து சூரியனை வணங்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதன் நற்பலனைக் கண்டு ஆங்கிலமுறை மருத்துவர்களே வியக்கின்றனர்.

முத்தும், சங்குகளும் கடலில் பிறப்பது உப்புத்தன்மை இருப்பதால்தான் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முற்காலங்களில், "வீடுகளில் திருஷ்டிகள், துர்சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது' என்று ஜோதிடர்கள் சொன்னால், ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை நடுவீட்டில் வைத்து, அதை மூன்று நாட்கள் கழிந்தபிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றி விடுவது ஐதீகமாக இருந்தது.

மகாலட்சுமியே உப்பு

அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

அதனால்தான் இரவு நேரத்தில் லட்சுமிதேவி விரும்பித் தங்குகிற உப்பை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். தெய்வத்தன்மை கொண்ட உப்பை விற்பனை செய்தால் இடர்கள் வருமென்று முற்காலத்தில் சொல்வழக்கம் இருந்தது.

உப்பை ஏன் பானையில் மட்டும் போட்டு வைத்தார்களென்றால், மண்பானைக்கு ஸ்வர்ணம் என்ற பெயருள்ளது. அதாவது தங்கமென்று பொருள். இதில் தங்கமகளாம் மகாலட்சுமி வடிவ உப்பைப் போட்டு வைத்தால் பணக்கஷ்டமே வராது என்ற நம்பிக்கை இருந்தது. இக்காலத்தில் பிளாஸ்டிக் டப்பா, பாட்டில்களில் அடைத்துவைப்பதால்  நிம்மதியில்லாமை, பொருள் கஷ்டங்கள் வருவதைக் காண்கிறோம்.

உப்பு தொடர்புடைய வழிபாட்டு நியதிகள்

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றபழமொழிகளால் இதன் சக்தியை அறிந்துள்ளோம். ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

எதிரிகளை அடங்கிப்போகும்படி செய்ய, உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்ததை விநாயகர் பிரார்த்தனை வரிசையில் காணலாம்.

தீட்டுக்காலம், பித்ருக்களுக்குச் செய்யப்படுகிற திவச வழிபாடு தினங்களில் உப்பில்லாத பண்டங்களைச் செய்து படையலிடுவதன் காரணம், வருகை தரும் முன்னோர்களுக்கு உப்பு கூட்டிச் சமையல் செய்துவைத்தால், இங்கேயே தங்கிவிடுவதாக ஐதீகம். அரை உப்புதான் போட வேண்டுமென்று ஒருசாரர் கருத்து.

கடற்கரைகளில் மாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற பித்ரு வழிபாட்டுக் காலங்களில் தர்ப்பணம் செய்வதால், அவர்கள் உப்புக்காற்றை வாங்கியபடி மகிழ்ச்சியடைந்து வாழ்த்துவதாக ஐதீகம் உள்ளது.

கடலிலிருந்து தோன்றும் உப்பை தலையில் போட்டு அதற்குரிய மந்திரம் சொன்னால் நோய்கள் யாவும் விலகிவிடும். மந்திரிக்கவும், திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடுவது வழக்கம்.

ஆலயங்களிலுள்ள பலிபீடத்தின்கீழ் உப்பையும் மிளகையும் போட்டால், நமக்குப் பிடிக்காதவர்கள் துன்பம் எய்துவர் என்ற வழக்கம் சமீபகாலங்களில் நிலவுகிறது. இது தவறான சிந்தனை. ஆலயத் தொட்டிகளில் சிறிது உப்பைப் போட்டு, "என் துன்பங்கள் நீரில் உப்புபோன்று கரைந்திடச் செய்வாய் இறைவா' என்று பிரார்த்தனை செய்துவருவதே முறையான வழிபாடாக அமையும்.

சாந்தீபனி முனிவர் மகனை மீட்ட உப்புச் சூழல்

கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் வில் பயிற்சி கற்றுக்கொடுத்தவர் சாந்தீபனி முனிவர். அந்த முனிவரின் மகனை பஞ்சஜனன் என்கிற அரக்கன் கடலில் ஒளித்து வைத்திருந்தான். குரு காணிக்கையாக அவர் மகனை மீட்டுத்தர எண்ணிய கிருஷ்ணர், கடல் அரசனைச் சந்தித்து விவரம் கேட்டு, அரக்கனிடம் போரிட்டு முனிவர் மகனை மீட்டபோது, அவன் உயிர் போனபின்பும் உப்புச்சூழ்நிலையால் (கடலுக்குள் குகை) உயிர் மீண்டுவந்தது. வாழ்வதற்கும் வளர்வதற்கும், நமது அவயவங்கள் வீணாகாமல் இருக்கவும் உப்பே ஆதாரப் பொருள்.

வெளிநாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய உப்பு வழிபாடு

வெளிநாடுகளில் இந்த உப்புப் பிரார்த்தனை ஒரு ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. தாங்கமுடியாத வறுமை, கடன், கஷ்டங்கள் ஏற்பட்டதால் டேவிட்சன் என்ற அமெரிக்க தொழிலதிபர் தனது மனைவி பிரேவ், இளம் மனைவி கிளாரா, மகள் லிவியாவுடன் கடலில் முழுகித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

தங்களை தெய்வம் கைவிட்டுவிட்டதாகக் கதறி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பிரார்த்தித்தபோது, ராட்சதக் கடல் அலை ஒன்றுடன் வந்த மூன்று பெண் உருவங்கள் கரைக்கு இழுத்து வருவதுபோல்  ஒரு பிரமையை உணர்ந்து, கரைக்குத் திருப்பப்பட்டார்.

"கடவுளே! வாழ்க்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று நினைத்தால் நன்றாக வாழவிடு! எங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துவிடு!' என்று, அங்கிருந்த உப்புப் படிமங்களை நால்வருமே இருகைகளிலும் வைத்துக்கொண்டு, சூரியன் உதிக்கும் திசைநோக்கி பத்து நிமிடங்கள் பிரார்த்தித்தனர்.

பின்னர் வீடு திரும்பினர். வீட்டு வாசலிலிருந்த கடிதப்பெட்டியில் ஒரு கவர் சிரித்தபடி வரவேற்றது. என்னே ஆச்சரியம்! இவர்கள் கட்டிவந்த மாதச் சீட்டுக்கு ஜாக்பாட் தொகைமுப்பத்திரண்டு கோடி டாலர்கள் கிடைத்தி ருந்தது.

உப்பு பிரார்த்தனையை டேவிட்சன் கூற, இச்செய்தி எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆம்! வாழ்வில் சோதனைகளிலிருந்து மீண்டுவர, புனர்வாழ்வு கிடைக்க சிறந்த ஆன்மிக சாதனம் இந்த எளிய உப்பு பிரார்த்தனை!

லட்சியம் நிறைவேற லவண மந்திர ஜெபமுறை

ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் 33-ஆவது ஸ்லோகம் "சௌபாக்கிய மந்திரம்' எனப்படுகிறது. "ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' எனத் தொடங்கும் இந்த விசேடத் துதியை, இரு கைகளிலும் காசுகள் வைத்துக்கொண்டு ஜெபித்தால் நிறைவாகப் பணம் சேரும் என்ற கருத்துண்டு. அதேபோன்று உப்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு, அதிகாலை ஐந்தரை மணி முதல் 16 முறை நமது பிரார்த்தனையைச் செய்தல்வேண்டும். இப்படியாக ஜெபம் செய்த உப்பை சேகரித்துவைத்து, 48 தினங்கள் கழித்து நீர்நிலைகளில் போட்டு வரவேண்டும். உண்மையான முறையில் சில மாற்றங்களைச் செய்துவிட்டார்கள். சரியான முறையை எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

லவணம் என்பதற்கு வடமொழியில் உப்பு என்று பொருள். லவண பிரார்த்தனா நிகண்டு (A Prayer Method of Lavana) என்ற பெயரில் உப்பு பிரார்த்தனை பற்றி (மலர் மருத்துவத்தில் ஆல்ஃபா தியானம் போன்று) தனியாக ஜெபம் செய்யும் முறை, மந்திரங்கள் ஒரு சிறு கையேடு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. உப்பு வழிபாட்டை சரியாகச் செய்திட அதன் விதிகளை அறிவோம்.

பௌர்ணமி அன்றும், சுபநாளிலும் காலை ஐந்தரை மணிக்கும், லாப வேளையிலும், நல்லவை நடக்க, லட்சுமி அருள்கிட்ட, வேலை பெற போன்ற பிரார்த்தனைகளைச் செய்யலாம். இதற்கு பூர்வபாக- சுப பல பிரார்த்தனை என்று பெயர்.

அமாவாசை அன்றும் சமநோக்கு நாளிலும் எதிரி விலக, மாமியார்- மருமகள் தகராறு அகன்று ஒற்றுமையாக, தொழில்கூட்டு நண்பர்கள் ஒன்றுபட, பிரிந்திருக்கும் கணவன்- மனைவி சேர்ந்திட பிரார்த்தனை செய்யலாம். உதாரணமாக சூரிய தசையில் சனி புக்தி காலத்தில் வியாபாரம், தொழில் முடக்கம், குடும்பத்தில் சச்சரவுள்ள ஒருவர் வட்டம் ஒன்றை வரைந்து, அதில் ஆசனமிட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இரு கைகளிலும் உப்பு வைத்தபடி, "ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று மானசீக முறையில் 108 முறை ஜெபித்து சூரியனை வணங்கிவிட்டு, 16 நிமிடங்களில் எழுந்து பூஜையறையில் மற்ற தெய்வங்களை நினைத்து வழிபடவேண்டும். இப்படி 48 தினங்கள் செய்து வந்தபின் சேர்த்துவைத்த உப்பை கடல்நீரில் போட்டுவிடவேண்டும். ஒவ்வொரு தசைக்கும் அந்தந்த கிரக மூல மந்திரங்களை ஜெபித்தபின் நம்பிக்கையூட்டும் தியானம் செய்தல் அவசியம்.

மாணவர்களுக்குக் கல்வி அறிவு வளர...

"நான் நன்றாகத் தேர்வு எழுதிவிடுவேன். அனைத்துப் பாடங்களையும் படித்து மனதில்பதிந்துள்ளேன். உள்ளமும் உடலும் புத்துணர் வோடு உள்ளது. எனக்கு ஹயக்ரீவர், சரஸ்வதி தேவி துணை நிற்கிறார்கள். நான் சாதிப்பது உறுதி' என்று தியானிக்கவேண்டும். சதுர வட்டத்தில் அமர்க.
  உடல்நலம் பெற...
"ஆரோக்கியம் என்னுடனே உள்ளது. உழைத்துக் களைத்ததால் இன்று சோர்வாக உள்ளேன். என் உடல்நிலை சீராகவே உள்ளது. அதற்கு ஆயுர் தேவியும், தன்வந்திரி பகவானும் துணை செய்கிறார்கள். நான் விரைவாக பூரண நலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.' இதற்கு நட்சத்திர வட்டம் போடுக.

செல்வ வளம்பெற்று தொழிலில் உயர்ந்திட...

பத்மம் என்கிற தாமரை வரைந்து, இரு சதுரா காரம் வரைந்து, அதிலமர்ந்து சர்வ முத்ராவில் (இருகைகளைச் சுருக்கி) அல்லது சிவாகம முறையில் உள்ள ரிஷப முத்திரை முறையில் உப்போடு கைகளை மேலே தூக்கியபடி வைத்துக்கொண்டு, "நான் தொழிலில் அபரிமித வளர்ச்சி காண்பது உண்மை. என் தொழில் கூட்டாளிகள் நல்லவர்கள். எங்கள் கம்பெனி லாப திசை நோக்கிச் செல்கிறது. அதற்கு சௌபாக்கிய லட்சுமி, குபேரன் துணை நிற்கிறார்கள். "ஓம் ஐம் க்லீம் க்லௌம் சௌம் லக்ஷ்மீ குபேராய மம ஐஸ்வர்யம் தேகிமே சதா' என்று 108 முறை வழிபடவேண்டும்.

ஜபத்திற்கும் முத்திராவுக்கும் உப்புக்கும் தொடர்புகள் உண்டு. இவற்றில் வெற்றிபெற சிவதீட்சா முறை, இரு சிவாகம முத்திரைகளை அறிந்து கொண்டால் போதும். உங்கள் லட்சியங்கள் எதுவாயினும் லவண (உப்பு) பிரார்த்தனையால் நிறைவேறும்; பிரச்சினைகள் அகலும் என்பது லவண சாஸ்திரம் கூறும் உண்மை. உப்பு வழிபாட்டைச் செய்து வாழ்வில் வெற்றி காண்பீர்.

குறிப்பிட்ட ஆசனங்களில் அமர்ந்து தான் மந்திர ஜெபம், பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமென்று ஆகம பூஜா சாஸ்திர விதி கூறுகிறது. வெறும் தரையில் அமர்ந்துசெய்தால் ஜெப பலன்கள் பூமிக்குச் சென்றுவிடும்.

ஆசனம், ஜெபம் சொல்லிக் கொடுப்பவர்கள், "முதல் ஜெபமந்திரத்தை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்துவிடுக' என்று கூறுவதைப் பார்த்திருப் பீர்கள். அதற்காகவே குறிப்பிட்ட ஜெப பிரார்த்தனைக்குரிய ஆசனங்களை வரைந்து, அதில் அமர்ந்து சக்தி சிதறலைத் தடுத்துக்கொண்டு, உடலுக்கு கவசமாகவும் பயன்படுத்துகிறோமென்று பிரார்த்தனை மந்திரநிகண்டு கூறுகிறது. தற்காலத்தில் சிலர் மடியில் பேப்பர் வைத்தபடி எல்லா இடங்களிலும் அமர்ந்து உப்பு பிரார்த் தனை செய்யச் சொல்கிறார்கள். இது அவரவர்களுடைய  சொந்தக் கருத்துகளாகும். ஆன்மிக மும் அறிவியலும் கலந்த உப்பு வழிபாட்டை முறையாகச் செய்வோம்; லட்சியங்களை அடைந்திடுவோம்.

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?

✠ இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16 விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு. ஆனால் அனைத்துவிதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு.

✠ தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும் (பச்சை) கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.

✠ தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள். தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.

✠ காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும். இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும். தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.

✠ கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது. கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும். மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜ்யோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார். இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்.